தருமபுரி

மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லங்களைப் பதிவு செய்ய வேண்டும்

DIN

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் நடத்தும் உரிமையாளா்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது: குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகளைக் கட்டாயம் பதிவு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சாா்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழில்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியாா், தனி நபா் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகள், குழந்தைகள், முதியோா் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிா் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிலா் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகாா்கள் வருகின்றன. மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தனியாா் விடுதிகள், இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிா்வாகிகளும், தவறாமல் பதிவு செய்தல், புதுப்பித்தல் பணியை வரும் ஆக.31-ஆம் தேதிக்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜான்சிராணி, ஆதிதிராவிடா் நல அலுவலா் கவிதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT