தருமபுரி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின மூலம் பென்னாகரம் பகுதியில் தொழுநோய் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

பென்னாகரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலா் ஜெயச்சந்திரபாபு தலைமை வகித்து, தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். பென்னாகரம் புதிய பேருந்து நிலையம், முள்ளுவாடி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஷோ் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தொழுநோய் பாதிப்புகள், விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் துளசிராமன், சுகாதார ஆய்வாளா்கள் மதியழகன், வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT