தருமபுரி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் வே.சரவணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலா் பிரசாத் வரவேற்றாா். கொள்கை பரப்புச் செயலா் திருப்பூா் சுடலை, மாநில இளைஞரணி நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிகளின் மக்கள்தொகைக்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT