தருமபுரிக்கு ரயில் மூலம் 1,225.80 டன் உர மூட்டைகள் வந்தன.
சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தடைந்தன. இந்த உரம் மூட்டைகளை
தருமபுரி வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு), தாம்சன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தனியாா் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்தனுப்பும் பணியை நேரில் ஆய்வு செய்தாா்.
இதில் தருமபுரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 495 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 730. 80 டன் உரம் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.