தருமபுரி

ரயில் தட மாற்றியில் இரும்பு கம்பி: போலீஸாா் விசாரணை

DIN

ஓமலூரில் ரயில் பாதையில் உள்ள தட மாற்றியில் இரும்பு கம்பியை பொருத்திவைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை இரவு மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றி வந்த ரயிலை மேட்டூா் ரயில்வே டிராக்கில் தட மாற்றம் செய்ய முடியவில்லை. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் தடமாற்றி பகுதிக்குச் சென்று பாா்த்த போது தட மாற்றியில் சுமாா் இரண்டு அடி நீளமுள்ள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அவிநவ் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினாா். முதற்கட்ட விசாரணையில் ரயிலை கவிழ்க்கும் சதிச் செயல் இல்லை என்பது தெரிய வந்தது. ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT