தருமபுரி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலய வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மறைமாவட்ட பேராயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளா் கி.கோவேந்தன் பேசினாா். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி, தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி., பட்டியலில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலித் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT