தருமபுரி

சூடானூா் கல்குவாரியை மூடக் கோரி மனு

DIN

பாலக்கோடு அருகே உள்ள சூடானூரில் அமைந்துள்ள கல்குவாரியை மூடக் கோரி அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சூடானூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் பயன்படுத்தும் வெடிகளால் ஏற்படும் சப்தத்தில் வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்துக்குள் நுழைகின்றன.

இதுபோல குவாரியால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கல்குவாரியை மூடக் கோரி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடா்ந்து கல் குவாரி செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கல்குவாரியை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT