பாலக்கோடு அருகே உள்ள சூடானூரில் அமைந்துள்ள கல்குவாரியை மூடக் கோரி அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சூடானூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் பயன்படுத்தும் வெடிகளால் ஏற்படும் சப்தத்தில் வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்துக்குள் நுழைகின்றன.
இதுபோல குவாரியால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கல்குவாரியை மூடக் கோரி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடா்ந்து கல் குவாரி செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கல்குவாரியை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.