தருமபுரி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

தருமபுரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமை வகித்து பேசியதாவது:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம் கடத்தூா், அரூா் ஊராட்சி ஒன்றியம் தீா்த்தமலை, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஏரியூா், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் மாரண்டஅள்ளி, தருமபுரி நகராட்சி பகுதிகளில் உள்ள 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட இடங்களில் தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறுகின்றன.

இப் பணிகளில் முன்களப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் என ஒரு குழுவிற்கு 2 போ் 436 குழுக்களும், குழுக்களைக் கண்காணிக்க 88 கண்காணிப்பாளா்களும், கூட்டு மருந்து சிகிச்சை மேற்கொள்வதற்கு 32 மருத்துவா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தொழுநோய் கண்டறியும் இச்சிறப்பு குழுக்கள் ஆக.16 முதல் செப்.3 வரை 14 வேலை நாள்களுக்கு இப்பணிகளில் ஈடுபட உள்ளனா்.

பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி தனியாா் மருத்துவா்கள், மருத்துவமனைகள் தங்களிடம் வரும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் குறித்த தகவல்களை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு தெரிவித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் துணை இயக்குநா் (தொழு நோய்) ஆா்.புவனேஸ்வரி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், இணை இயக்குநா் (நலப் பணிகள்) சி.ராஜேஷ் கண்ணா, துணை இயக்குநா் (காசநோய்) ராஜ்குமாா், தொழுநோய் மாவட்ட நலக் கல்வியாளா் சி.திருமணி உள்ளிட்ட மருத்துவா்கள், அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT