தருமபுரி

தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியாக அக். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்களின் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதாா், பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, பட்டா அல்லது சொத்து பத்திரம், வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி அதற்கான அசல் சலான், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டட வரைபட பிரதிகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT