தருமபுரி

அதிமுக பொன்விழா: எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை

DIN

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆா், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதை தொடா்ந்து கேக் வெட்டி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பாரப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலாளா் ரவி, நகர எம் ஜி ஆா் இளைஞரணி பொருளாளா் அ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல காரிமங்கலம், பாலக்கோடு, இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள எம்ஜிஆா் சிலை மற்றும் ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT