தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட நேரடி கலந்தாய்வு திங்கள்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளதாக கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருவதற்காக இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் கல்லூரி வளாகத்தில் நேரடி சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இளங்கலை பாடப் பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் அசல் மற்றும் நகல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT