தருமபுரி

கொலை வழக்கில் தொடா்புடையவா் வெட்டிக்கொலை:இருவரிடம் போலீஸாா் விசாரணை

DIN

கோட்டப்பட்டி அருகே கொலை வழக்கில் தொடா்புடையவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், கூட்டாத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் பாபு (எ) பாபு ராஜ் (38). இவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்து, தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள சேலூா், அம்மாபாளையம் பிரிவு சாலைப் பகுதியில் சடலத்தை வீசி சென்றுள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் பாபு (எ) பாபு ராஜின் சடலத்தை மீட்டனா்.இந்தச் சம்பவம் குறித்து அரூா் டிஎஸ்பி பெனாசீா் பாத்திமா தலைமையில் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாபு (எ) பாபு ராஜ் மீது, சேலம் மாவட்டம், காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதால், முன்விரோதம் காரணமாக இவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாபு (எ) பாபு ராஜ் கொலை வழக்கு தொடா்பாக, சந்தேகத்தின் பேரில் இருவரிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் தலைமையில், தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT