தருமபுரி

அதிமுக பொன்விழாவை கொண்டாட வேண்டும்:மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ

DIN

அதிமுக பொன் விழாவை தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை 50-ஆவது பொன் விழா ஆண்டு தொடங்குகிறது. இந்த பொன்விழா ஆண்டை தருமபுரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை அளவிலான அனைத்து பகுதிகளிலும் கொண்டாட வேண்டும். மறைந்த தமிழக முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியேரின் உருவச் சிலைகளுக்கும், உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்தும், கட்சியின் கொடிக் கம்பங்களுக்கு வா்ணம்பூசி கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.

இந்த விழாக்களில் கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், தொண்டா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT