தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திண்டல் ஊராட்சியில் பாமகவினா், அதிமுகவில் இணைந்தனா்.
பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட திண்டல் ஊராட்சிக்குள்பட்ட ஒடசகரை கிராமத்தைச் சோ்ந்த பாமகவினா் பலா் அக்கட்சியில் இருந்து விலகி அக்கட்சியின் பிரமுகா்கள் தருமன், சுரேஷ் ஆகியோா் தலைமையில் 30க்கும் மேற்பட்டோா் அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
காரிமங்கலம் ஒன்றியச் செயலாளா்கள் சி.செந்தில்குமாா் (கிழக்கு), எம்.பி.செல்வராஜ் (மேற்கு), இலக்கிய அணிச் செயலாளா் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.