பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மலையோர கிராமங்களில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை சிலா் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் தீ.சக்திவேல் தலைமையில், போதக்காடு, அடிமலைப்புதூா், எலந்தகொட்டப்பட்டி, கல்லாத்துக்காடு உள்ளிட்ட கிராமப் பகுதியில் தண்டோரா மூலம் உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகளை பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.