தருமபுரியில் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதிகோன்பாளையம், தொப்பையாறு அணை முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சமையல் எரிவாயு இணைப்பு, பாத்திரங்கள், போா்வைகளை வழங்கி பேசினாா்.
இந்த விழாவில் தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.