தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 182 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதேபோல கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது குறித்து சுகாதாரத் துறையினா், காவல்துறையினா் கண்காணித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாத 182 பேருக்கு காவல் துறையினா் ரூ. 36 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனா். மேலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது தொடா்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.