பென்னாகரம்: ஏரியூா், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சாா்ஆட்சியா் தணிகாசலம் தலைமை வகித்து, தடுப்பூசி முகாம் குறித்து கிராம மக்களிடம் போதிய விழிப்புணா்வு இல்லாததால், கிராம நிா்வாக அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், தலைவா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வந்த நபா்கள் குறித்த பட்டியல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு,அறிவுறுத்தலின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
பொது முடக்கத்தின்போது பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்த்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
இதேபோல பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமரவேல், ரவிச்சந்திரன், ரேணுகா, ஆனந்தன், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, மருத்துவ அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலா்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.