தருமபுரி: தருமபுரி மண்டலத்தில் அத்தியாவசியப் பணியாளா்களுக்காக 4 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.
இதையொட்டி பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதாரம், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்காக தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் தருமபுரி, ஊத்தங்கரை, ஒசூா், திருப்பத்தூா் பணிமனைகளிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மையங்களுக்கு இயக்கப்படுகின்றன.