தருமபுரி

அரூரில் தூய்மைப் பணிகள் முகாம்

DIN

அரூரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தீவிர தூய்மைப் பணிகள் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் நகா் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதி சாலை, திரு.வி.க. நகா், கோவிந்தசாமி நகா், தில்லைநகா், பெரியாா் நகா் உள்ளிட்ட நகரின் அனைத்து தெருச்சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகளை செய்தனா்.

தொடா்ந்து, கரோனா தொற்றுப் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளைச் சோப்பினால் கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணா்வு தகவல் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT