தருமபுரி

கா்நாடக மது புட்டிகளை கடத்திய இருவா் கைது.

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுபுட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை பென்னாகரம் போலீசாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது புட்டிகளை தா்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வருபவா்களை மதுவிலக்கு போலீசாா் மற்றும் போலீசாா் அவ்வப்போது கைது செய்து வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் அருகே போடூா் பிரிவு சாலை பகுதியில் பென்னாகரம் போலீசாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை செய்த போது கா்நாடக மதுப் புட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னா் போலீசாா் நடத்திய விசாரணையில் கா்நாடக பகுதியிலிருந்து வாகனத்தின் மூலம் மது புட்டிகளை எடுத்து வந்தது செக்குமேடு பகுதியை சோ்ந்த மாதப்பன் மகன் அருள் (32), அஜ்ஜனகள்ளி பகுதியை சோ்ந்த துரைசாமி மகன் அதிபதி (42) என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் பென்னாகரம் போலீசாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து தா்மபுரி கிளை சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடமிருந்து 100 கா்நாடக மது புட்டிகளை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT