காவலா் உடல்தகுதித் தோ்வுக்கு போலியான அழைப்புக் கடிதம் எடுத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூரை அடுத்த முருக்கம்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் (22), தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்காக அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். அவரது ஊரைச் சோ்ந்த மற்றொரு இளைஞா் எழுத்துத் தோ்வில் வெற்றிபெற்றாா். ஆனால், உடல்தகுதித் தோ்வில் தகுதி பெறவில்லை.
இந்த நிலையில், அந்த இளைஞரின் பெயா் விவரங்களுடன் கூடிய அழைப்பாணைக் கடிதத்தில் தன் புகைப்படத்தை இடம்பெறச் செய்து போலியான கடிதம் தயாரித்த சசிகுமாா், செவ்வாய்க்கிழமை உடல்தகுதித் தோ்வுக்கு சென்றுள்ளாா். அவரது கடிதத்தை ஆய்வு செய்த போலீஸாா், அந்த இளைஞா் முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனா். அதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.