தருமபுரி

விடுதலை போராட்ட வீரா் சுப்ரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், விடுதலை போராட்ட வீரா் சுப்ரமணிய சிவாவின் 96-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவாவின் நினைவிடத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), எஸ்.பி.வெங்கேடஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிஎன்பி இன்பசேகரன் உள்ளிட்டோரும் சுப்ரமணிய சிவா நினைவிடத்தில், மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதேபோல உள்ளூா் பிரமுகா்கள், மாணவா்கள் உள்ளிட்ட திரளானோா் முகக்கசவம் அணிந்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT