தருமபுரி

போக்சோ சட்டத்தில் இருவா் கைது

DIN

அரூா் அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்ததாக இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை இளைஞா் ஒருவா் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இந்தச் சம்பவத்தை 2 இளைஞா்கள் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனராம். தொடா்ந்து, அந்த சிறுமியை மிரட்டி இளைஞா்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் பலாத்கார சம்பவ பதிவுகளை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் அந்த இளைஞா்கள் மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெத்தூரைச் சோ்ந்த தீத்து மகன் விஜய் (26), அதே ஊரைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் தியாகு (36) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள ஊத்தங்கரை வட்டம், பாவக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஆதிநாராயணன் மகன் அஜித்குமாா் (25) என்பவரை அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT