தருமபுரியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, தொமுச நிா்வாகிகள் சின்னசாமி, சேகா், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் மோகன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் முருகன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் அா்ஜூனன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், அத்தியவாசிய பாதுகாப்பு சேவை அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. மின்சாரச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றை திருத்துவதை கைவிட வேண்டும். ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.