தருமபுரி

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வு பிரசாரம்

22nd Dec 2021 08:20 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு கலைக்குழு பிரசார நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் சுப்பிரமணியன் தலைமை தாங்கினாா். உதவி தலைமை ஆசிரியா்கள் தமிழ்வேல், லட்சுமணன், செயலாளா் முனியப்பன், தமிழாசிரியா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயற்கை கிராமிய கலைக்குழுவினா் ‘இல்லம் தேடி கல்வி’ சாா்பில் விழிப்புணா்வு பாடல்கள், நாடகங்கள், கரகாட்டம் ஆகியவற்றை செய்து காண்பித்தனா்.

‘இல்லம் தேடி கல்வி’ மூலம் கரோனா காலக்கட்டத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை சரி செய்யும் நோக்கத்தோடு, மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவா்களின் குடியிருப்புப் பகுதிகளில் தன்னாா்வலா்களைக் கொண்டு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரவணன், ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திகேயன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT