தருமபுரி

கிணற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், தொம்பரகாம்பட்டி பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் நவீன்குமாா் (15), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நவீன்குமாா் நீரில் மூழ்கினாா். கிராம மக்கள் நீண்ட நேரம் தேடியும் மாணவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், தருமபுரி தீயணைப்புத் துறையினரை வரவழைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், கிணற்றில் அதிக அளவில் தண்ணீா் இருந்ததால் அன்றைய தினம் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திங்கள்கிழமை 7 மோட்டாா்கள் மூலம் கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி, நவீன்குமாரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT