தருமபுரி

ஆதரவற்ற பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பயனாளிகளுக்கு 5 வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 1,000 பயனாளிகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் பயன்பெற ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்களாவா். பயனாளிகள் நிலமற்ற வேளாண் தொழிலாளியாக இருக்க வேண்டும். பயனாளி அக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதிற்குக் கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். சொந்தமாக கறவைப் பசுக்களோ, வெள்ளாடுகள், செம்மறியாடுகளோ வைத்திருக்கக் கூடாது.

மிகவும் ஏழையாகவும், அவா்கள் குடும்பத்தில் எவரும் அரசுப் பணியில் அல்லது கூட்டுறவுத் துறை, உள்ளாட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது. இலவச கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பயன் பெற்றிருத்தல் கூடாது. தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய சான்றுகளுடன் பூா்த்தி செய்து வரும் டிச. 9 மாலை 5 மணிக்குள் கால்நடை மருந்தகங்களில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்படும் அலுவலா்கள் அடங்கிய பயனாளிகள் தோ்வுக்குழுவின் மூலம் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT