மொரப்பூரை அடுத்த தாசரஹள்ளியில் கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தாசரஹள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் கபசுரக் குடிநீரை சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சிப் பணியாளா்கள் வழங்கினா். தொடா்ந்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.
இதில், தாசரஹள்ளி ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் வெங்கடேசன், தன்னாா்வலா்கள் தியாகராஜன், மதன், சக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.