பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுவதாக இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது : பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவதால், பென்னாகரம்,ஒகேனக்கல் ,ஏரியூா், பெரும்பாலை,சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி,தாசம்பட்டி,சத்தியநாதபுரம்,ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளாா்.