தருமபுரியில் தீத்தடுப்பு குறித்து தீயணைப்புத் துறை வீரா்களின் மிதிவண்டி பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தீத்தொண்டு வார விழாவையொட்டி, தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்து மிதிவண்டி பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் 40 போ் பங்கேற்று, தருமபுரியிலிருந்து ஈரோடுக்கு தங்களது மிதிவண்டியில் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனா்.
இந்த நிகழ்ச்சியில், தருமபுரி தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலா் ஆனந்த், தருமபுரி நிலைய அலுவலா் ராஜா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
.