தருமபுரி

தருமபுரியில் முகக் கவசம் அணியாத 538 பேருக்கு அபராதம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேருக்கும் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி, அதனை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத் துறை, காவல் துறையினா் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனா். மேலும், கடைகள் வணிக வளாகங்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் காவல் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் துறையினா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கு ரூ. 1,11,200 அபராதம் விதித்தனா். இதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேரிடம் இருந்து ரூ. 24,500 அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT