அரூரில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மாவேரிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இயற்கை உரம் தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை உதவி இயக்குநா் ச.கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறுகையில், அரூா் நகரில் வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் இயற்கை உரம் தயாரிக்கவும், தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்யவும் எளிதாக இருக்கும். இதனால் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்படுத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து, பழையப்பேட்டை, அம்பேத்கா் நகா், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் குடிநீா் பிரச்னைகள், மின் விளக்கு வசதிகள், கழிவு நீா் கால்வாய் தூய்மைப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்தும் அவா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பிறகு, வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, செயல் அலுவலா் செ.நந்தகுமாா், துப்புரவு ஆய்வாளா் சு.ரவீந்திரன் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலக பணியாளா்கள் உடனிருந்தனா்.