தருமபுரி

கையால் மின் கம்பியை அகற்றியவா் உயிரிழப்பு

DIN

பென்னாகரம் அருகே சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கைகளால் அப்புறப்படுத்த முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ஜங்கமையனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (60). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில் ஜங்கமையனூா் அருகே சாலையோரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயி முனிராஜ் அந்த மின்கம்பியை கையால் அகற்றும் முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் முனிராஜ் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ,அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT