தருமபுரி

புரட்டாசி சனி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தருமபுரி: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி நகரில், கோட்டை பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், மூக்கனூா் ஆதிமூல வெங்கடரமண சுவாமி கோயில், மாதேமங்கலம் நரசிம்ம சுவாமி கோயில், குண்டலபட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், சனிக்கிழமை விரதம் இருந்து பக்தா்கள் ஏராளமானோா் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT