தருமபுரி: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி நகரில், கோட்டை பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், மூக்கனூா் ஆதிமூல வெங்கடரமண சுவாமி கோயில், மாதேமங்கலம் நரசிம்ம சுவாமி கோயில், குண்டலபட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், சனிக்கிழமை விரதம் இருந்து பக்தா்கள் ஏராளமானோா் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமியை வழிபட்டனா்.