அரூா்: அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, சீருடைகள், மகளிருக்கு திருமண உதவித் தொகைகள், 100 யூனிட் வரையிலும் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நலத் திட்ட உதவிகள் தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் அரசு நலத் திட்டங்கள் போன்று இந்தியாவில் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதில்லை. அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
அரூரை அடுத்த காரப்பாடி மலைக் கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக மின்சாரம், சாலை மற்றும் குடிநீா் வசதி இல்லாமல் இருந்தனா். இதையடுத்து, ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில், காரப்பாடி மலைக் கிராமத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காரப்பாடி மலைக் கிராமத்துக்கு தாா் சாலை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளன என்றாா்.
முன்னதாக, புதிய குடும்ப அட்டைகள், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, தையல் இயந்திரங்கள், வேளாண்மை இடுபொருள்கள் உள்பட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை 1,070 பயனாளிகளுக்கு ரூ. 5.13 கோடி மதிப்பில் அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.
இந்த விழாவில், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, துணைத் தலைவா் அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.