தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், மருத்துவா், காவலா் உள்பட 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள கொட்டாவூரைச் சோ்ந்த செவிலியா், தருமபுரியைச் சோ்ந்த நீதித்துறை ஊழியா், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த மதுக்கடைப் பணியாளா், நல்லம்பள்ளி, தருமபுரி பகுதியைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள், மருத்துவ மாணவா், பாப்பிரெட்டிப்பட்டியை சோ்ந்த வழக்குரைஞா், காவலா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பெண்கள், 5 மாணவா்கள், 4 தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.