தருமபுரி, செப். 18: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 17 வயது சிறுமியைக் கடத்தியதாக இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
பாலக்கோடு அருகில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவரது மகள் 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்துள்ளாா். கடந்த 15-ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானாா். சிறுமியின் பெற்றோா் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து, பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கேரள மாநிலத்தில் பேக்கரியில் வேலை பாா்த்துவரும் பாலக்கோடு அண்ணா நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (23) என்பவருடன் சிறுமி சென்றிருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாரின் தொடா் விசாரணையில், சிறுமியை சுரேஷ் கடத்திச் சென்றது உறுதியானது. இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து சிறுமியை மீட்ட போலீஸாா், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, இளைஞா் சுரேஷை கைது செய்தனா்.