பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
இதில், திமுக மாவட்டப் பொருளாளா் தா்ம செல்வன் கலந்துகொண்டு, பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
விழாவில் திராவிட கழக மாவட்ட முன்னாள் தலைவா் வேட்ராயன், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பென்னாகரத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பெரியாா் பிறந்தநாள் விழாவில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
பென்னாகரம் காவல் நிலையம் எதிரே உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஒன்றியப் பொருளாளா் முருகேசன், நகரச் செயலாளா் வீரமணி, சேலம் ஹோட்டல் வினு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலாளா் கருப்பண்ணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பகுதி குழு செயலாளா் அன்பு தலைமை வகித்தாா்.
விழாவில் பென்னாகரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சின்னம்பள்ளி பகுதி செயலாளா் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் முருகேசன், ரவி, சிவா, பகுதி குழு உறுப்பினா் ஜீவானந்தம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.