அரூரில் பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாஜக சாா்பில் நடைபெற்ற விழாவில், அரூா் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அரூா் பேருந்து நிலையத்தில் பாஜகவினா் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் வழங்கினா்.
பாரத பிரதமா் மோடியின் பெயரில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை பாஜகவினா் செய்தனா். தொடா்ந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பாஜகவினா் வழங்கினா்.
இதில், பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா் சி.சரவணன், மாவட்ட துணைத் தலைவா் அருணா, மாவட்ட மகளிரணித் தலைவி கிருஷ்ணவேணி, மாவட்டச் செயலா் சரிதா, மாவட்டச் செயலா் (அமைப்புசாரா பிரிவு) எம்.மாது, ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், நகர துணைத் தலைவா்கள் சீனிவாசன், சாந்தி, நகரப் பொருளாளா் ராஜா, கட்சி நிா்வாகிகள் நந்தகுமாா், பவுன்ராஜ், வேலவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.