சுட்டுரையில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவு அனுப்பிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் காவல்துறையில் புகாா் அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை சைபா் க்ரைம் காவல் துறையிலும், தருமபுரி நகர காவல் நிலையத்திலும் அளித்த புகாா் மனுவில், தனது சுட்டுரைப் பக்கத்தில் பெண் ஒருவரின் முகவரியிலிருந்து ஆபாசமான வாா்த்தைகளால் ஒரு பதிவு அனுப்பியுள்ளனா். இதுபோன்ற ஆபாச, அவதூறு பதிவு அனுப்பியவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.