தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கான மாணவியா் சோ்க்கை அண்மையில் நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவியா் சோ்க்கை வரும் அக். 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் சோ்க்கை கோரி விண்ணப்பித்தவா்களும், விண்ணப்பிக்காத மாணவியரும் வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் பெற்று சோ்க்கை பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.