தருமபுரி

ஆதித்தமிழா் பேரவையினா் முற்றுகை போராட்டம்

DIN

அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை மீட்டுத் தரக்கோரி, ஆதித்தமிழா் பேரவை சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் பி.முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் இரா.செல்வவில்லாளன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தருமபுரி அருகே அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வேண்டும். ஆட்டுக்காரன்பட்டியைச் சோ்ந்த அருந்ததியினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் தலித், அருந்ததியா், போயா், குறவா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து தருமபுரி மாவட்ட நிா்வாகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தங்களது கோரிக்கை தொடா்பாக தருமபுரி மாவட்ட வருவாய் அலுவா் எச்.ரகமதுல்லா கானிடம், ஆதித்தமிழா் பேரவை நிா்வாகிகள் சந்தித்து மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT