தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் பணி நீக்கத்துக்கு எதிராக, சிஐடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன் தலைமை வகித்து பேசினாா். மாநிலக்குழு உறுப்பினா்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி ஆகியோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தனியாா் கிரானைட் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணி நீக்கத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளா்களிடம் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட நிா்வாகிகள், பி.ஆறுமுகம், சி.ரகுபதி, அங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.