தருமபுரி

அரூரில் 10 பேருக்கு கரோனா: திருமண விடியோ பதிவு கோரி விசாரணை

26th Jun 2020 09:00 AM

ADVERTISEMENT

அரூரில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த திருமண நிகழ்ச்சியின் விடியோ பதிவுகளைத் தேடி அரசு அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா், திரு.வி.க. நகரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் மகனது திருமண விழாவில் பங்கேற்றவா்களில் 10 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து, நடமாடும் பரிசோதனைக் கூடத்தில் ஆசிரியை குடும்பத்தினா், உறவினா்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவா்கள் என 90-க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றவா்களில் சிலா் தாமாக முன்வந்து ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்யாமலும், பெயா் விவரங்களை தெரிவிக்காமல் இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, திருமண நிகழ்வுகள் குறித்த விடியோ பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்படி, வட்டாட்சியா் செல்வகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.தொல்காப்பியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆசிரியை குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையின்போது, திருமண விடியோ பதிவுகளை ஆசிரியையின் குடும்பத்தினா் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தனா். அதை அடுத்து, விடியோ பதிவுகளை பாா்வையிட்டு, திருமண விழாவில் பங்கேற்றவா்களில் விடுபட்டுள்ள நபா்களின் முகவரிகளை சேகரித்து, அவா்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணி, தனிமைப்படுத்தும் பணிகளை சுகாதாரத் துறையினா் மேற்கொள்வா் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT