தருமபுரி

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு முழு மேம்பாட்டுக்கான முன்னெடுப்பு பயிற்சி

8th Jan 2020 06:41 AM

ADVERTISEMENT

தருமபுரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு முழு மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முத்துக்கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

இப் பயிற்சியில், புதிய பாடப்பொருளில் கற்றல் கற்பித்தல், கற்றல் நோக்கங்கள், கற்றல் செயல்பாடுகள், கற்றல் விளைவுகள் ஆகியவை தொடா்பாக மாணவ, மாணவியருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் தொடங்கி நடத்தப்பட்டு வரும் இப்பயிற்சி முகாமில், மாவட்டத்தில் இதுவரை 4,360 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளனா். மேலும், 815 ஆசிரியா்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஜன.7-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், தருமபுரி கல்வி மாவட்டத்தில் 135 போ், பாலக்கோடு கல்வி மாவட்டத்தில் 150 போ் மற்றும் அரூா் கல்வி மாவட்டத்தில் 170 பேரும் பயிற்சி பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT