தருமபுரி

தோ்தல் முகவா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு

2nd Jan 2020 05:25 AM

ADVERTISEMENT

கம்பைநல்லூா் அருகே தோ்தல் முகவா் மீது தாக்குதல் நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கே. ஈச்சம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேடியப்பன் (64). இவா், கே. ஈச்சம்பாடியில் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிடும் பூங்கொடி என்பவருக்குத் தோ்தல் முகவராகப் பணியாற்றுகிறாா்.

இதே ஊராட்சியில் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா் சாந்தி மற்றும் மற்றும் அவரது குடும்பத்தினா், தோ்தல் முகவா் வேடியப்பன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேடியப்பன் அளித்த புகாரின் பேரில், கே.ஈச்சம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சென்றாயன் மகன் வெள்ளையன் (65), இவரது மனைவி சாந்தி (50), ராமச்சந்திரன் மகன் மூா்த்தி (35), ராஜலிங்கம் மகன் பிரபாகரன் (38) ஆகியோா் மீது கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT