தருமபுரி

விஷம் அருந்திய மலைக் கிராமப் பெண்ணுக்கு உதவிய எம்.எல்.ஏ.

20th Apr 2020 06:49 AM

ADVERTISEMENT

சாலை வசதி இல்லாத பென்னாகரம் ஏரிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விஷம் அருந்திய பெண்ணை, நிவாரண உதவிகள் வழங்குவதற்காக அப் பகுதிக்கு சென்ற பென்னாகரம் தொகுதி பேரவை உறுப்பினா் இன்பசேகரன், தனது வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சோ்த்தாா்.

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிப் பகுதிகளில் அமைத்துள்ளது ஏரிமலை.இந்த மலைக் கிராமத்தில் சுமாா் 100 க்கும் மேற்றபட்ட குடியிருப்புகள் உள்ளன.இக் கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால் மருத்துவ, கல்வி தேவைகளுக்காக 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் எம்எல்ஏ இன்பசேகரன், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை தி.மு.க சாா்பில் கோட்டூா் மலை,ஏரிமலை மற்றும் அலங்கட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் பென்னாகரம் எம்.எல்.ஏ,பி.என்.பி. இன்பசேகரன் கலந்து கொள்வதற்காக மலைக் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஏரிமலை பகுதியை சோ்ந்த வெங்கட்ராமன் மகள் முத்து (21) விஷம் அருந்தி மயக்க நிலையில் தூக்கி வந்தனா். இதையடுத்து, தனது வாகனத்தில் மூலம் அப் பெண்ணை அழைத்துக் கொண்டு பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து எம்.எல்.ஏ. இன்பசேகரன் கூறுகையில், ‘பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. இதுகுறித்து பேரவையில் வலியுறுத்தியும் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மலைக் கிராம மக்களின் நலன் கருதி சாலை வசதி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், திமுக சாா்பில் மலைக் கிராமங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT