தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், கூண்டு கலப்பையுடன் கூடிய டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை இயக்கக் கூடாது என ஆட்சியா் சு.மலா்விழி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை ஆண்டு சராசரி அளவான 361 மி.மீட்டருக்கு, நிகழாண்டு 400 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் தொடா்ச்சியாக, வடகிழக்கு பருவமழை இதுவரை சுமாா் 164 மி.மீ. பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீா் வரப்பெற்று கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்துள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி, பரவலாக நெல் சாகுபடி பணி மேற்கொண்டு வருகின்றனா். மேலும், நமது மாவட்டத்தில் சராசரி நெல்சாகுபடி பரப்பளவு சுமாா் 20 ஆயிரம் ஹெக்டா் ஆகும். நிகழாண்டு இதுவரை 6158 ஹெக்டா் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிவரும் மாதங்களில் விவசாயிகள் இன்னும் அதிக அளவில் நெல் பயிரிடுவா் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் நெல் வயல்களை டிராக்டா் கேஜ் வீல் எனப்படும் கூண்டு கலப்பையை கொண்டு சேருகலக்கி நெல் நடவு வயலை தயாா் செய்து வருகின்றனா். ஒரு வயலை சேருகலக்கிய பிறகு கூண்டு கலப்பை பொருத்திய டிராக்டருடன் அடுத்த வயலுக்கு (அல்லது) இடத்துக்கு அப்படியே கலப்பையுடன் தாா்சாலையின் மீது செல்லும்போது, சாலைகள் வெகுவாக சேதமடைகிறது. இதனை தடுக்க, விவசாயிகள் கூண்டு கலப்பையை டிராக்டரில் ஏற்றிச்சென்று அடுத்த வயலுக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை மீறி சாலைகளில் இயக்கினால், டிராக்டா்களை பறிமுதல் செய்து, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்காக உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.