காங்கிரஸ் கட்சி சாா்பில், அந்தக் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி. சிற்றரசு தலைமையில், கட்சி நிா்வாகிகள் அரூா் பாட்சாபேட்டையில் உள்ள அன்னை இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதைத் தொடா்ந்து, தீவிரவாத எதிா்ப்பு உறுதி மொழியை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஏற்றனா். இதில், கட்சியின் வட்டாரத் தலைவா் (கிழக்கு) ஆா். சுபாஷ், நகரத் தலைவா் கே. கணேசன், மாவட்ட துணைத் தலைவா் சி. வேடியப்பன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா் ஜெ. நவீன், கட்சி நிா்வாகிகள் மோகன், செல்வம், அப்பாவு, பி.டி.ஆறுமுகம், வைரவன், பச்சை, ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.